21 Apr 2018

சுரங்க நீர்,,,/


தூக்கத்திலிருந்து எழுந்து சென்று கொண்டிருக்கிறேன்.
எங்கு செல்கிறேன்,எனக்கிட்ட இலக்கு எது
எதுவும் தெரியல்லை,

பின் தொடர்ந்து செல்கிறேன்,
எனக்கு முன் காட்டி செல்கிறவர்களாய் சிலர்/
சைக்கிள் மற்றும் இரு சக்கரவாகனங்களில் சென்றவர்
தவிர்த்து கால் நடை காட்டி உருவகம் சித்தரித்தவர்களாயும் சிலர்/

அவர்கள் சென்ற பாதையில் நான் தொடர்வதும்
நான் தொடர்கிற பாதையில் அவர்கள் செல்வதுமாய்
இருந்த இடம் எங்கோ தூரத்தின் தூரத்தில் அம்புக் குறியிட்டு நிற்பதாய்,,/

கை காட்டிய அம்புக்குறியின் கீழே தோண்டப்பட்டிருக்கிற வட்ட வடிவ அகலக்குழிக்குள்ளாய் இறங்கியும் ஏறியுமாய் வந்து கொண்டிருந்த மனிதர்களின் கைகளிலும் தோள்களிலும் இடுப்புகளிலும்
தண்ணீர் குடங்களும், குடுவைகளுமாய்,,,/

மேலேறி வந்தவர்களில் சிலரும் இறங்கியவர்களில் சிலருமாய் பேசிக்கொள்வது ஊன்றப்பட்ட விளக்குகளின் வெளிச்சம் காட்டிய ஒற்றைக் குழிக்குள் கொஞ்சம் தெளிவற்றும் தெளிவு காட்டியுமாய் கேட்கிறதுதான்,,/

நான் நானூறு அடி தூரம் வரை போய்நீர் கொண்டு வருகிறேன்,
நீங்கள் நீர் தேடிப்போகும் தூரம் எத்தனை அடி வரை செல்லும் என்பது தெளிவற தெரியவில்லை.செல்லுங்கள் சடுதியாய் என்கிறனர்,

செல்லும் பாதை கொஞ்சம் கரடு முரடாகவும் வழியில் ஊன்றப்பட்டிருக்கிற விளக்குகள் சில எரிந்தும் எரியாமலும் அரைகுறை வெளிச்சம் காட்டியுமாய்,,,/
ஆகவே கொஞ்சம் கவனம் காட்டிச் செல்லுங்கள்,
 ஊனப்பட்டிருக்கிற பாதை கொஞ்சம் பிசகினாலும் ஏமாற்றிவிடக்கூடும்

ஆகவே நண்பர்களே தோழர்களே உறவுகளே,,
கொஞ்சம் கவனம் காட்டியும் ஜாக்கிறதையாயும் போய் வாருங்கள்,,,
என்கிற பேச்சையும் குரலையும் குரலையும் தாங்கி
தூக்கம் கலைந்து இறங்குறேன் நானும் குழிக்குள்,,,

No comments: