10 Dec 2017

தூக்கம் என் கண்களை,,,,,,

பெய்தது மழையாகவும் பார்த்தது இவனாகவும் ஆகிப்போகிறார்கள்.முன்னது அக்றினை,பின்னது உயிர்தினை எனக் கொள்ளலாம்தான்.

உயிர்தினையான இவன் காலைஎழுந்திருக்கும் போது சற்றே தாமதம் காட்டி விட்டுத்தான் எழுந்திருக்கிறான்,

முதல் நாள் இரவு தாமதமாகத்தான் தூங்கினான்.ஏன் தெரியவில்லை. இப்பொ ழுதுசமீப சமீபமாய் அப்படித்தான் ஆகிப்போகிறது.காரணம் ஏறிப் போன உடல் மூப்பா,இல்லை உடல் மூப்பு மற்றும் மன எண்ணங்களா தெரியவில்லை.

இது விஷயத்தில் கனியண்ணன் சொல்வதை கேட்டால் ஆச்சரியம் கலந்த ஐயப்பாடு கண்டிப்பாக இருக்கிறது,

நானெல்லாம்நல்லா தூங்கி வருசக்கணக்குல ஆச்சு சார் என்கிறார்,என்ன என நெருங்கிப்போய் கேட்டால் சொல்வதற்கு ஆயிரம் காரணமும்கதைகளும் கை வசமும் அவர் ஒட்டுப்போட்டு அணிந்திருக்கிற ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட் முழுவதுமாய்நிரப்பிவைத்திருக்கிறார்.

“பாசக்கார பைய புள்ளைக நெறஞ்சி இருக்குற ஊர்லதான் ஏன் பையனும் படிக்கிறான்,சொந்த பந்தமெல்லாம் அங்கிட்டுதான் சார்,என்ன பொழப்பு தேடி பல பக்கம் கை நீட்டுனவுங்களுக்கு அந்த பூமி செட்டாகிப் போக அங்கயே வேர் விட்டுட்டாங்க,விட்ட வேர இனி பிரிச்சி எடுத்துட்டு வர்றது ரொமப் செரமம் ,செரமம்ங்குறது ஒரு பக்கம் இருந்தாக்கூட ஏன் இனி போயி அப்பிடியெல்லாம் பிரிச்சி எடுத்துட்டு வரணும்ங்குறேன்,விட்ட வேரு விட்ட வேராவே இருக்க ட்டும் தளைச்சது தளைச்சதாவே இருக்கட்டும்,பூத்ததும் காய் ச்சதும், பிஞ்சிவிட்டு காய் வச்சி பழம் கனிஞ்சது கனிஞ்சதாவே இருக்கட்டும், அது பரப்புன நெனலும்அதுலவந்துஅடைச்சபலனடைஞ்சதும் பலனடைஞ்சதா வே இருக்கட்டும்ன்னு அவுங்கள எடம் பெயர்தாம அப்பிடியே விட்டுட்டோம்”

“அவுங்க பொழப்பு அவுங்க பழக்கம் வழக்கம் அவுங்க யேவாராம் அவுங்க தொழிலு, இப்பிடி பலது பலதா அவுங்க அங்க குடி கொண்டு இருக்குற போது அவுகளப் போயி இங்கிட்டு கயிறு கட்டி இழுத்துட்டு வந்தம்னா ஒன்னு இழுத் துட்டு வர்ற கயிறு அந்து போகும்,இல்லைன்னா அவுங்களுக்கு நம்மளால பொழப்பு குடுக்க முடியாம போயிரும் ,அதுனாலத்தான் நான் ஒரு நா ரெண்டு நாளு லீவு எடுத்துட்டு போயினாலும் பாத்துட்டு வந்துர்றது.,

”போனம்னா ஒடனே வர முடியுதா,,? பத்து குடும்பங்க இருக்கு,அங்கயே வீடுக ஒண்ணொன்னும் ஒவ்வொரு யெடத்துல,ஒரு நாளைக்கு ஒரு கும்பமுன்னு கை நனைச்சாக் கூட பத்து நாளு வேணும் ,பத்து நாளும் அங்க உக்காந்து திங்கிறதும் சந்தோசப்படுறதும் நல்லாத்தான் இருக்கும்,ஆனா நம்ம பொழப்பு ன்னு ஒண்ணு இருக்கா இல்லையா,அதக் கருதிதா அந்தந்த வீட்ல ஒரு காலு ஒரு மிதின்னு மிதிச்சிட்டு வந்துர்றது.

“அதுல பாத்தீங்கின்னா அவுங்களுக்கு ஏகப்பட்ட வருத்தம்.வேற,”நீயெல்லாம் வந்தா ஏங் வீட்டுல சாப்புடுவையா வைப்பையான்னு சண்டாளத்தனமா பேசு வாங்க,எல்லாத்துக்கும் சிரிச்சிக்கிட்டும் தலையாட்டிக்கிட்டும் சகிச்சிக்கிட்டும் போனதுக்கு அடையாளமா ஒரு டம்பளர் தண்ணிய குடிச்சிப்புட்டு வர வேண் டியதாப் போகும்.

”அதுலயும் சமயத்துல பிரச்சனையாகிப்போகும்,பிரச்சனையின்னா பிரச்சனை சமயத்துலதலைசுத்திவிழுகுறஅளவுக்கு வந்து பூதாகரமாயி நிக்கும். சாப்பாடு தான இதுல போயி என்ன பெரிய அளவுக்குன்னு நாம நினைக்கிறது அவுங்க ளுக்கு கௌரவப் பிரச்சனையாகிப் போகும்.இதுல நான் பெரிசு நீ பெரிசுன்னு ஆகிப்போறதும் கூட உண்டு,இப்பித்தான் நான் வருவேன்னு எனக்காக ஒரு விட்ல கறிச்சோறு சமைச்சி நான் தண்ணிப்பிரியர்ன்னு தெரிஞ்சி ஒரு குவார்ட்டர்பாட்டிலு வேற வாங்கி வச்சி காத்துக்கிட்டு இருந்துருக்காங்க, நான் எப்பயும் போல எல்லாரு வீட்டுக்கும் போயிட்டு நான் வாங்கிக் கொண்டு போனத குடுத்துட்டு அவுங்க எங்க வீட்லயெல்லாம் சாப்புடுவீங்களான்னு கொறை பட்டுக் கிட்டு இருக்கும் போதே அவுங்க பேச்சதாங்கிக் கிட்டு சைஸா தப்பிச்சி வந்து பஸ்ஸேறி வர்றதுக்குள்ள போது போதுன்னு ஆகிப் போச்சி,

பின்ன போற யெடங்கள்லயெல்லாம் சாப்புடணுன்னு சொன்னா முடியுமா சொல்லுங்க?

”இது போக நாம போற சொந்தக்காரவீடுகளுக்கு கைய வீசிக் கிட்டும் போக முடியாது.அதுல நாலு வீடு வசதி வாஞ்சவுங்களா இருப்பாங்க, நாலு வீடு கைக்கும் வாய்க்கும் பத்தாதவுங்களா இருப்பாங்க,இதெல்லாம் நமக்கு தெரிஞ் சிருக்க வாய்ப்பில்லதான்.இருந்தாலும் எல்லாருக்கும் பொதுவா ஒரு வீட்டு க்கு என்ன வாங்குறமோ அது போலவே பத்து வீட்டுக்கும் பார பட்சமில்லாம வாங்கீர்றது.எனக்கு அது ஒரு செலவுதான்னாலும் கூட பத்து வீட்டு சொந்த மும் என்னைய வாயாறா மனசார வாழ்த்தி கெயெடுத்து கும்புடும் போது நான்முழுக்கமுழுக்க பாக்கியம் பெற்றவனாகிப்போறேன் இல்ல அந்த வேளை யில,,/ அத விட வேறென்ன வேணும் சார் ஒருத்தனுக்கு,”அது எனக்கு கெடை க்குதுஅந்தஊருக்குப் போகும் போது.

“இது போக சாப்பாடு வேற,சாப்புடலைன்னா கோபம் வேற,நான் இதையெல் லாம் பெரிசா எடுத்துக்கிர்றதில்ல,

அப்பிடித்தான் பெரிசா எடுத்துக்கிறாம பத்து வீட்டுல எல்லார் வீட்டுக்கும் போற மாதிரி எனக்காக கறியும் பாட்லும் வாங்கி வச்சிருந்த வீட்டுக்கும் ப்போயிட்டு வந்துட்டேன்.அவுங்க எவ்வளவு சொல்லியும் கூட சாப்புட மறுத்து வந்துட்டேன்.

அவருஎனக்கு தம்பி மொறை வேணும் ,என்ன தம்பிஎப்பிடியிருக்கீங்க, நல்லா யிருக்கீங்களாங்குற பேச்சுக்கு மறு பேச்சு பேசா தவரு,அந்த ஊர்க்காரருதான், மரியாதையானவரு,நான்அங்கபோயி யெறங்குறேன்னாஅவருஊர்லஇருந்தா வந்துருவாரு,பஸ்டாண்டுக்கு,தொழில்லஇருக்குறநெளிவுசுளிவுகளையும்மத்த மத்ததுகளையும் ஏங்கிட்டகேட்டுத் தெரிஞ்சிக்கிருவாரு.அதுல நான் சொல்றத கவனத்துல எடுத்துக்கிட்டு அவரோட சொந்த ஐடியாவையும் சேத்து நல்லா பிரமாதமாபண்ணுவாரு.

“அவருகட்டுனது என்னோட சொந்தக்கார பொண்ணு,அந்த பொண்ணுக்கு எங்க ஊருதான். அதுக்கு ஒரு ஆசை ,எனக்கு வாக்கப்பட்டணும்ன்னு.இது எனக்கு தெரியாது, அதும் யாருகிட்டயும் சொல்லாம அந்த ஆசைய மனசுல வச்சிக் கிட்டேஇருந்துருக்கு.பூட்டிவைச்சஆசைக்கு றெக்க மொளச்சி சிறகடிச்ச மாதிரி அப்பப்ப அது பறந்து வந்து என்னய சுத்தி வர்றதுண்டு,இது தெரியாத தத்தியா இருந்துருக்கேன் நானு, ஒண்ணு அந்தப்பொண்ணாவது ஏங்கிட்ட சொல்லீரு க்கணும்,இல்ல யார் மூலமாவது சொல்லிஜாடைமாடையா தெரியப்பண்ணீரு க்கணும்,

“எனக்கு எங்க மாமா பொண்ணு மேல ஒரு கண்ணு,அவரு பாத்தா இப்பயே வேணாலும் வீட்டுல கூட்டிக்கொண்டு போயி வச்சிக்கம்பாரு.அப்பிடி அவரு சொல்லும் போது பரஸ்பரம் ரெண்டு பேருக்கும் விவரம் தெரியாத வயசு,

”பிற்பாடு விவரம் தெரிஞ்சப்பெறகு அவரும் ஏங்மாமாவும் ஏங்கிட்ட அப்பிடி சொல்றதில்ல, நானும் அவருகிட்ட பெரிசா இது பத்தி ஒண்ணும் கேட்டுக் கிர்றதில்ல,ஏதோ அந்த நேரம் சொல்லீருக்காரு,, எனக்கும் கட்டுனா அந்தப் பொண்ணத்தான் கட்டணும் இல்லைன்னா வேற யாரையும் கட்டக் கூடாது ங்குறஅளவுக்கு முடிவெல்லாம் கெடையாது,மனசுல ஒரு மூளையில இருந்த சின்னதான ஆசை,அவ்வளவுதான்.

இத மாமாகிட்ட யாரோ சொன்னப்ப பாப்போம் என்ன இப்ப அவசரம், முன்னா டி சின்ன வயசுல ஏதோ சொன்னதுதான்,அதுக்காக அதையே செய்யணும்மு ன்னு கட்டாயமா என்னன்னுஎங்க மாமா சொல்லும் போதே என்னைய விரும் புன பொண்ணுஜாடை மாடையா சொல்லீருந்தாக்கூட நான் அவளையே கட்டீ ருப்பேன்,

“எனக்கு என்னான்னாஎன்னையும் விரும்புறதுக்கு அந்த நேரத்துல ஒரு ஆளு இருந்துக்கேன்னு ஒரு சந்தோஷம்தான் பாத்துக்கங்க,ஆனா அந்த சந்தோசம் என்னைய வந்து தொத்திக்கிறதுங்குள்ள எனக்கு கல்யாணம் முடிஞ்சி புள்ள குட்டிகள்ன்னு ஆகிப் போச்சி,

நான் ஒண்ணும் பெரிய வசதியான வீட்டுப்புள்ள கெடையாது, என்னவோ கைக்கும் வாய்க்கு பத்தாத கூலிக்காரந்தான் வருசமெல்லாம் கூலிக்கு அலை ஞ்சேஅலுத்துப் போவேன். இருந்தாலும்பெரிசா ஒண்ணும் கொறைவில்லை. பத்தாக் கொற பொழப்பும் கெடையாது, உள்ளூர்லவேலை இல்லாத நேரத்துல டவுனுக்கு வேலைக்குப் போயிருவேன்.

“இந்தஊர்ல ஏங் கால் படாத தோட்டம் காடு கெடையாது,இன்ன வேலைன்னு இல்லை,எல்லா வேலையும் செய்வேன்.களை எடுக்கப்போறது,பாத்தி கட்டப் போறது.தண்ணி பாய்ச்சப்போறது,மரம் வெட்டுக்கு,வெறகு வெட்ட,கெணத்து வேலைக்குன்னு எல்லாம் செய்யிறதுதான்,

“இப்பிடித்தான்ஒரு தடவை நைட் கரண்டு இருந்த நேரம் பெரியவீட்டுக்காரரு தோட்டத்துக்கு தண்ணி வெலக போக வேண்டியிருந்துச்சி.போயி வெலகீட்டு இருக்கேன்,நடு ராத்திரி இருக்கும்.தீடீர்ன்னு நான் தண்ணி வெலகீட்டு இருந்த யெடத்துக்கு கொஞ்சம் தூரம் தள்ளியிருந்து மல்லிகைப்பூ வாசனை வந்திச்சி, என்னடா இது இந்த கனிக்கு வந்த சோதனைன்னு மனச கல்லாக்கிக்கிட்டு தண்ணி வெலகீட்டு இருந்தா மல்லிகைப்பூ வாசனை கூடுதே தவுர கொறயல, சிலுசிலுன்னு நல்ல காத்து வேற,அப்பப்ப கொஞ்சம் மோகினி,பிசாசுன்னு கதை வேற கேட்டு வச்சிருக்கேனா,,,,அதுல சொல்ற மாதிரி மோகினி,கீகினி ஏதாவது வந்து நம்மமேல குடிகொண்டுருமோன்னு நெனைப்பும்,பயமும் வந்துருச்சி,

“அந்த நெனைப்பு வந்த மறு நிமிசம் கைகாலெல்லாம் ஒதறல் எடுக்க ஆரம் பிச்சிருச்சி,தண்ணி வெலகுறதுல இருந்த கவனம் போயி மனசு பூராம் மோ கினி வந்து உக்காந்துருச்சி, உக்காந்தது சும்மா இல்லாம மனுச மனச பாடா படுத்தி நடுக்கமெக்க வைச்சிருச்சி,என்ன செய்யிறது ஏது செய்யிறதுன்னு எனக்கு புரியல,

“இப்பிடித்தான் பக்கத்து வீட்டு அண்ணன் ஒரு தடவை ராத்திரி தோட்டத்துல தண்ணிபாய்ச்சிக்கிட்டுஇருந்துருக்காரு,அப்பஇப்பிடித்தான்நடுராத்திரி தாண்டி மல்லிகைப்பூவாசனைவந்துருக்கு.என்னசெய்யிறதுன்னு தெரியல அவருக்கு,  விடு பாத்துக்கிருவம் என்ன ஆகீறப்போகுது இப்பைன்னு துணிஞ்சி நின்னு தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருந்தவரு தீடீர்ன்னு மயங்கி விழுந்துட்டாராம்,நல்ல வேளைஅவருஅப்பிடி மயங்கி விழுந்த வேளை பளபளன்னு விடியிற வேளை யா இருந்துருக்கு.அந்த வழியா வந்த பக்கத்து தோட்டத்துக்காரரு பாத்து தூக்கிட்டு போயி வீடு சேத்துக்காரு,அன்னைக்கி காய்ச்சல்ல படுத்தவருதா ஒரு வாரத்துக்கு எந்திரிக்கல,அப்புறம் ஆஸ்பத்திரி மருந்து மாத்திரைன்னு ஏகப்பட்ட செலவுபண்ணிதான்அவருஒடம்பசரிபண்ணமுடிஞ்சிச்சி,அதுபோல ஆயிருமோன்னு நெனைச்சேன்,எனக்கு அந்த நெனைப்பு வந்தமறு நிமிஷம் காய்ச்சல் வர்ற மாதிரி ஆகி கைகாலெல்லாம் ஒதறல் எடுக்க ஆரம்பிச்சிரு ச்சி.

ஒடனே ஒடிகிட்டு இருந்த தண்ணி ஓடிக்கிட்டு இருக்க அப்பிடியே விட்டுட்டு பயமும் ஒதறலுமா வீட்டுக்கு வந்துட்டேன்.மோட்டாரு அங்க ஒடிக்கிட்டு இருக்கு.நான் அப்பிடியே வந்துட்டேன் ,கேள்விப்பட்ட தோட்டத்துக்காரரு ஓடி வந்து ஏங்கிட்ட மோட்டார் ரூமு சாவிய வாங்கீட்டு போயி மோட்டார ஆப் பண்ணீட்டு வந்து என்னைய வாங்னு வாங்குன்னு வாங்கீட்டாரு.

“சரின்னுஅன்னையில இருந்து அவரு வீட்டு தோட்டத்துக்கு தண்ணி வெலகப் போறதில்ல.ஆனா அவரு விடலை. ஒரு நாள் ஏங்கிட்ட வந்து நீயி இதுக்கெல் லாம்அனாவசியமாபயப்படாத,இன்னைக்கி நைட்டு நானும் ஓங்கூட தண்ணி பாய்ச்சவர்றேன்னுஅவரும்ஏங்கூட அன்னிக்கி நைட்டு வந்தாரு, நான் தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருக்க அவரு மோட்டாரு ரூமு மாடியில ஏறி படுத்துக்கிட் டாரு.

அன்னைக்கி தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருக்கும் போது வந்த மாதிரியே நடு ராத்திரி தாண்டுனதும் மல்லிகைப்பூ வாசனை வர ஆரம்பிச்சிருச்சி.ஒடனே பதறிப்போயி அவர எழுப்பி விஷயத்தச் சொன்னதும் அவரு பதறாம மேல இருந்து யெறங்கி வந்தவரு,லேசா சிலு சிலுன்னு காத்து அடிக்குதா இப்ப, வா என்னோடன்னு கெணத்து மேட்ட நோக்கி கூட்டீட்டு போனாரு,கூட்டிக்கிட்டு போனவரு கெணத்து மேட்டுக்கிட்ட போன ஒட னே டார்ச் அடிச்சி காண்பிச் சாரு,அங்க பாத்தா கெணத்து மேட்டுல நாலைஞ்சி மஞ்சனத்திசெடிகபூப்பூத்து மலர்ந்து கெடக்கு,பக்கத்துல போயி மோந்து பாருன்னு சொன்னாரு,அவரு சொன்ன மாதிரியே மல்லிகைப்பூ வாசனை அந்த மஞ்சனத்திச் செடியில இரு ந்து தூக்கலா வந்திச்சி,மல்லிகைப்பூ வாசனை மஞ்சனத்தியில குடி கொண் டிருக்க நீ வாட்டுக்கு மோகினி அது இதுன்னு எதுக்குப் போயி பயப்பட்டுக் கிட்டு இருக்கன்னு,என்னைய தெளிவு படுத்துனாரு ,

அன்னையில இருந்து எந்த பயமும்இல்லாம எந்த ராவானாலும் எந்த பகலா னாலும்மனுசபயம்தவிர்த்து எல்லாயெடத்துக்கும் போயிட்டு வந்தேன் வேலை க்கு.அப்பிடி போயிக்கிட்டும் வந்துக்கிட்டும்இருந்தஒரு நாளையில தான் கம்ப ங்கருது அறுக்கணுன்னு என்னைய வேலைக்குக் கூப்புட்டுருந்தாரு பெரிய வீட்டுக்காரரு,

நான் வேலைக்குப்போன அதே தோட்டத்துக்கு என்னைய விரும்புன பொண் ணும் கறுதறுக்க வந்துருக்கு,அது எனக்கு தெரியல, காண்ட்ராக்ட் வேலை, மொத்தம்பத்து பேருக்கு மேல வேலைக்கு வந்துருந்துதாங்க, அதுல அவளும் ஒருத்தியா பொதிஞ்சி கெடந்தது தெரியல எனக்கு,

“ஆளு வேற கொஞ்சம் குட்டையா வெளைஞ்சி நிக்குற கம்பந்தட்டை ஒயரத் துக்கு இருப்பாளா அதுனால கதிரறுத்துக்கிட்டு இருக்கும் போது வெளிய தெரியல,

கதிரறுக்குற அவுங்ககிட்ட இருந்து அறுத்த கறுத சாக்குல வாங்கி வாங்கி போட்டுக்கிட்டு போயிக்கிட்டே இருந்தேன்,அப்ப எல்லார் கிட்டயும் குனிஞ்சி நிமிந்து கருது வாங்குனது போலதான் அவகிட்டயும் வாங்கிட்டு வந்துகிட்டு இருந்தேன்,எல்லார்கிட்டயும் கருது வாங்கும் போது கருது குடுக்குற அவுங்க கையும் வாங்குற ஏங் கையும் ஒரசத்தான் செய்யும்.ஆனா அவகிட்ட கருது வாங்கும் போது மட்டும் அந்த ஒரசல்ல ஒரு வித்தியாசம் தெரிஞ்சிச்சி,

நான் அந்த நேரத்துல அத வெளிப்படுத்தாதவனா இருந்துட்டு வேலையெல் லாம் முடிஞ்சப்பெறகு எல்லாரும் வீட்டுக்கு கெளம்பிப்போற நேரமா பாத்து கருதறுக்க வந்திருந்த எங்க பக்கத்து வீட்டு அக்காகிட்டப்போயி விஷயத்தச் சொன்னப்பஅடகிறுக்காஇதப்போயா ஏங்கிட்ட வந்து கேப்ப.அவ கை ஓங் மேல ஒரசுனது தற்செயல் கெடையாது,அவ ஓங் மேல உசுறயே வச்சிக்கிருக்காடா கிறுக்குப்பையலே,இது தெரியாம,நீயி ஏன்கிட்ட வந்து அவ கைய தொட் டுட்டா, காலத் தொட்டுட்டா,,,,,, டட்டுட்டா,, ,டாட்டுட்டான்னு கதை சொல்லிக் கிட்டு திரியிற,,,,ஓங் வயசு புள்ளைங்க ஊருக்குள்ள திரியிற திரியிறதப் பாரு, அதது காரச்சேவுக்கு கையும் காலும் மொளைச்சது மாதிரி இருந்துக்கிட்டு என்னென்ன வேலை பண்ணிக்கிட்டு திரியுது, ஒனக்கென்னதங்கத்துக்குன்னு அந்தஅக்கா சொன்ன நாளையிலயிருந்து கொஞ்ச நாள்லயே ஒன்னைய இப்பி டியே இந்த ஊர்லயே விட்டா சுத்தமா நம்ம தொழில மறந்துட்டு கூலிக்கார னா மாறிறுவேன்னு இந்த ஊர்ல தூக்கிக்கொண்டாந்து போட்டு தொழிலப் புடிச்சி என்னோட யெணைச்சி கட்டிவிட்டு என்னைய ஒரு தொழில்க்காரனா ஆக்கி வச்சி எனக்கு கல்யாணமும் பண்ணி வச்சிட்டாங்க,

எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் போது என்னைய விரும்புன அந்தப் பொண்ணப் பத்தி ஏங் வீட்ல சொல்ல எனக்கு தைரியம் இல்லை.

எனக்கு கல்யாணமும் ஆகி ஏங் சொந்த ஊருக்குப் போன பெறகு எதாவது வேலையா இந்தஊருக்கு வரும் போது அவ வாக்கப்பட்ட வீட்டுக்கு போக நேர்ந்து போகுதுதான்,

அப்பிடியா போகையில மனசு படுற சங்கடம் என்னைய ரெண்டு நாளைக்கு தூங்க விடுறதில்லை.

அப்பிடியா இருக்குற போது போன ஒரு தடவைதான் அவ வீட்டுக்கு போக வேண்டிய நிர்பந்தம் ஆகிப்போச்சி,ஏன்னா பத்து வீட்டுக்காரகள்ல அவுங்களும் ஒரு வீடு/

“அப்பிடி போயிட்டு வரும் போது எல்லார் வீட்டுக்கும் போயிட்டு அவ வீட்டு க்கும் போயிட்டு வந்துட்டேன்,சாப்புடாம செய்யாமா ஒரு டீக்கூட குடிக்கல, அவ புருசன் புள்ள குட்டிகள பாத்துட்டு ஒக்காந்து பேசீட்டு நா கொண்டு போனத குடுத்துட்டு வந்துட்டேன்.

“நான்வந்ததுக்கு அப்புறமா அவ ரொம்ப மனசு ஒடைஞ்சி வருத்தப்பட்டுருக்கா, என்னடா இவன் நம்மள கல்யாணந்தான் கட்டிக்கிற மாட்டேன்னுட்டான், நம்ம வீட்டுக்கு வந்தா சாப்புடக்கூட மாட்டேங்குறானேன்னு ரொம்ப பீல் பண்ணிட்டு ரெண்டு நா சரியா சாப்புடாம தூங்காம கெடந்துருக்கா,

”அவன் புருசங்காரன் போன் பண்ணி விஷயத்த சொன்னான் ,இன்ன மாதிரி இன்ன மாதிரின்னு,அப்பறமா ஒரு நா போயி நானே பணம் குடுத்து வம்படி யா போயி கறி எடுத்துட்டு வரச்சொல்லி சாப்புட்டுட்டுதான் வந்தேன்.

கல்யாணம்ஆயிரெண்டுபுள்ளைங்கஆனப்பெறகும் கூட நம்மள உசுறா நெனை க்க ஒரு ஜீவன் இருக்குன்னு சந்தோசமா இருந்தாலும் கூட ஒரு பக்கம் வருத் தமாவும் இருக்கு.

அதஅவகிட்டசொல்லீட்டு பொழப்பப்பாரு ஒழுக்கமா ,கண்டபடி மனச அலைய விடாமன்னு சொல்லீட்டு ஊரு வந்து சேந்தேன்.

எனச் சொல்கிற கனியண்ணன் இது போலான நெனைப்புகளெல்லாம் சேந்து தான் என்னைய தூங்க விடாம பண்ணீருது என்கிறார்,

இவனுக்கு தூக்கம் வந்த வேளை வெளியில் மழை பெய்ய ஆரம்பித்திருந்த து.

கதவை திறந்து கொண்டு வெளியில் போய் பார்த்த வேளையாய் பூமிக்கும் வானத்திற்குமாய் நட்டு வைத்த வெள்ளிக் கம்பிகளை போல் பெய்த மழை பூமியில் காலூன்ற எப்பொழுது பிள்ளையார் சுழியிட்டது என்கிற ஆச்சரியம் இவனில் மேலிட்டது.

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
தம +1

KILLERGEE Devakottai said...

நன்று
த.ம.3

vimalanperali said...

நன்றியும் அன்பும்

vimalanperali said...

அன்பும் பிரியமும் நன்றியுமாய்!

'பரிவை' சே.குமார் said...

நீளமான கதை...
அருமை அண்ணா....

vimalanperali said...

வணக்கம் பரிவை சேகுமார் அண்ணா,நன்றியும் அன்பும்!