5 May 2015

வெங்காயம் வாங்கலையோ வெங்காயம்,,,,,,

கொண்டுவருகிறபொருள்கீழேவிழுந்துவிடக்கூடாதுஎன்கிறகவனத்திலும்,ஜாக் கிரதையிலுமாய் வர வேண்டியிருக்கிறது.

கொஞ்சம்அசந்தாலும் கையில் இருக்கிற பைஅல்லதொங்கவிட்டிருக்கிறபை கழண்டோஅல்லதுஅறுந்தோவிழுந்துவிடும்ஆபத்துஇருக்கத்தான்செய்கிறது.

வலதுபக்கம்பெல்லைஒட்டிதொங்கவிடப்பட்டிருக்கிறபிளாஸ்டிக்பைஒண்ண ரைக்கிலோதக்காளியையும்,இடதுபக்கமாய்தொங்கவிடப்பட்டிருக்கிற நரம்புப் பை இரண்டுகிலோ சின்ன வெங்காயத்தையும், ஒருகிலோபெரிய வெங்காயத் தையுமாய்தன்னில்அடைவைத்தும்,காத்தும்கொண்டுமாய்சைக்கிளின்ஹேண்ட் பாரில்/

மென்காற்றுஉடல் தழுவ அதன் கை பிடித்தவனாய் வந்துகொண்டிருக்கிறான்.
ஓட்டாதுவிட்டுப்போனசைக்கிளாலும்,இல்லாதுபோய்விட்டஉழைப்பினாலும் உடல்சற்றேகனத்துப்போய்களவாணிச்சதை போட்டு விட்டது. சொந்த உடலே அந்நியமாகித்தெரியவும்சொன்னசொல்கேட்கவுமாய்மறுக்கிறது.உடல்,பொருள் ஆவிஎன்கிற மூன்றையும் இணைக்கிற மையப்புள்ளி சற்றே பிசகி எழுத்துப் பிழையுடனாய் மனம் திருகிப்போய் நிற்கிறது.

பத்மாவதி அம்மன் ஸ்டோர்ஸீக்கு தவணை ரூபாய் தர வேண்டும்.எவ்வளவு பாக்கி இருக்கும் எனத்தெரியவில்லை.சென்ற மாதம் ஒரு டீசர்ட் எடுத்த பாக்கி மட்டுமாய் இருக்கும் என்பதாய் நினைவு.அது என்ன ஒருஇருநூறு ரூபாய்க் குள்ளாய் இருக்கலாம்.கையில்ஒருநானூறு கொண்டு போனால் போதாதா?

வெங்காயம்விலைஇறங்கியிருக்கிறதாஇல்லைஏறியிருக்கிறதாதெரியவில்லை.
.இரண்டுநாட்களாய் மனைவிசொல்லிக் கொண்டேதான் இருக்கிறாள். பஜார்ப் பக்கம்போனால்கண்டிப்பாகவாங்கிவரவேண்டும்வெங்காயம்என.இவன்தான் போகவில்லை.அதுநேரமின்மையாலாஅல்லதுமிதமிஞ்சிய சோம்பேறித்தனத் தினாலாதெரியவில்லை.அவசரத்திற்குவீட்டுக்குபக்கத்தில்இருக்கிறமளிகைக் கடையில்வாங்கிக்கொண்டதில்செலவுஅதிகமாய்ஆகிப்போனதாய்தெரிகிறது.

சின்னவள்தான் கேட்டாள். என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துவிட்டீர்கள் என/ சுடிதார் போட்ட பூக்குட்டியாய்/

இத்தனைக்கும் மணி இரண்டே முக்கால்ஆகியிருந்தது, சனிக்கிழ மை மதியம் இரண்டே முக்காலுக்கு வருவது சீக்கிரமா?என்கிற இவனின்கேள்விக்கு அரை நாள்ஆபீஸானாலும்கூடமூன்றுஅல்லதுமூன்றரைமணிக்குத்தானேவருவீர்கள். இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டீர் களேஎன்பதாய்இருந்ததுசின்னவளின்பேச்சு.

சாப்பிட்டதும்அசந்துவிட்டான்.நேற்றுஇரவுதாமதமாகத்தூங்கினான்.டீவியில் நல்ல பாடல்களாய் ஒலிப்பரப்பாகிக் கொண்டிருந்தன. கண்களையும், காதை யும்,மனதையும்அடகுவைத்துவிட்ட நீச்சல மற்ற பொழுதது.டீ.விக்கும் இவனு க்குமாய்நெச விட்டிருந்த இழையின் நூல்அறுந்துபோகாமால்இருந்த மென் பொழுதைக்கடந்துஎப்பொழுதுதூங்கிப்போனான்எனத்தெரியவில்லை,மறுநாள் காலை யில்டீயைக்கொடுத்தகையோடுமனைவிசொன்னாள்.டீவிப்பாத்தா
ஆப்பண்றதில்லையா?என/

மனம்பறித்தபாடல்களையும்,பாடலுக்குஇசைத்தவர்களையும்,பாடல்எழுதியவர் களையும்,பாடியவர்களையும் அந்த காட்சி பொதிந்த சினிமாக்களயும் சொன்ன பொழுது இவன் மனைவி ”என்னையும் கூட எழுப்பியிருந்தால் கூட அமர்ந்து பாட்டுக் கேட்டிருப்பேனே,எதிர் காலத்தில் நம் சரித்திரம் எழுதப்படும் போது நடுநிசியில்ஒன்றாய்அமர்ந்துபாட்டுக்கேட்டஇணையற்றதம்பதிகள்எனகாலம் பதிவுசெய்யுமேஎன்கிறாள்.தவறுதான் அப்படிச் செய்யாதததுஎன்கிற முற்றுப் புள்ளியுடனான பேச்சுடனாய் முடித்துக் கொண்டது இப்பொழுது ஏனோ ஊடு பாவாய்/

படுக்கைவிட்டு எழுந்ததும் கம்யூட்டர் முன்பாக அமர்ந்து விட்டான். அது ஏன் அப்படிஆகிப்போகிறது எனத்தெரியவில்லை,செய்த வேலையின்முடிவு எப்படி எனப்பார்ப்பதில் அப்படி ஒரு ஆர்வம் தலை தூக்கிப் போய்/அல்லது ஏதாவது ஒரு வேலை இருந்தால் உடனே முடித்து விட வேண்டும்என்கிறதான முனை ப்பு.

கம்பூட்டர்முன்னாய்அமந்திருக்கிறவேளையிலேயேடீத்தந்துவிடுகிறாள்மனைவி. டீநன்றாகவே இருக்கிறது.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,போல/

சரிரைட் செய்கிறவேலையில் முனைப்புக் காட்டினால் மட்டுமே சீக்கிரமாய் பாஜாருக்குச்செல்ல முடியும்.இல்லையென்றால் சின்ன வள் சொன்ன மாதிரி இப்படியே கம்யூட்டர் முன்னாய் நேரம் காலம் தெரியாமல் அமர்ந்திருக்க வேண்டியதுதான்.

சின்ன வெங்காயம் கிலோ 40 எனவும் பெரிய வெங்காயம் கிலோ 25 எனவுமாய் கடைப்பையன் சொன்னநேரம் ஒவ்வொன்றிலுமாய் இரண்டு கிலோ வாங் கி விடலாம்எனத்தோணியது.

வழக்கமாய் கடையில் இருக்கிற சார்லஸ்ஸை காணவில்லை. வேலையில் இருந்து நின்றுவிட்டதாய்ச்சொன்னான்கடைப்பையன். அப்படியே யூ டர்ன் அடித்து திரும்பிவிடலாமா? என்கிறதான மெல் லிய நினைப்பு இவனுள்ளாய் தலை தூக்கிய நேரம் கடைப் பையன் எவ்வளவு போட என்கிறான்.இன்னும் அரை மணியில் வருவதாய் கடைப்பயனிடம் பையையும், உறுதியையும் கொடுத்துவிட்டு டீ சாப்பிட்டு வரலாம், அப்படியே முடிந்தால் தோழரையும் பார்த்து விட்டு வரலாம்,.அவரிடம் கேட்டிருந்த உதவி என்ன ஆனது எனத் தெரியவில்லை.இன்று மதிய த்திலிருந்து அவரின் செல்போன் சுவிட் ஆப், இவனும் ஆபீஸ்விட்டு வந்ததிலிரு ந்து போன் செய்து பார்க்கி றான். ம்கூம்,,,,,, தொடர்பிலக்கிற்கு அப்பால்உள்ளதாகவோ, அல்லது ஒருமாதிரியாய்”கீங்க்கீ” எனத்தான்சப்தம்வருகிறது.

பர்மாக்கடையில்டீசாப்பிட்டுக்கொண்டிருக்கையில்எதிர்பட்டதோழரிடம்விஷயம் சொல்லிக்கேட்டபோதுஇப்பொழுதுஒருவேலையாய்போய்க்கொண்டிருக்கிறேன், திங்கள்கிழமைபேசுகிறேன்,எனஅவசரம்காட்டிச்சென்றார்,அவருடன்மற்றொரு தோழரும்/

சரிஇப்பொழுதுஎன்னஅதனால்,,,,,,?ஆனால்பார்ப்போம்இல்லையென்றால்வேறு பக்கம்முயற்சிபண்ணவேண்டியதுதான்.என்கிறஎண்ணம்சுமந்தவனாய் வெங் காயக்கடைக்குவந்தபோதுரெடியாகவெங்காயத்தைப்போட்டுவைத்திருந்தான்.
கடைக்காரப்பையன்.

கடைக்குள்ளாய்குவிக்கப்பட்டித்தெரிந்ததேங்காய்கள்இவனதுகண்ணில்பட்டது.
வேண்டாம்.இங்கேவாங்கிப்போகிறதேங்காய்சரியில்லைவாங்கவேண்டாம்இனி அங்கு என சென்ற முறையே மனைவி சொல்லியிரு ந்தாள்.

பஜாருக்குப்போகையில்தேங்காய்வாங்கவேண்டும்என்கிறநினைப்போமுடிவோ இவனில்இருந்திருக்கவில்லை.வெங்காயத்தைவாங்கிக் கொண்டு திரும்பும் போதுஎதிர்ப்பட்டதெப்பம்சுற்றுச்சுவர்காட்டியும்வண்ணவிளக்குகளால்அலங்கரி க்கபட்டுமாய்தெரிந்தது. தெப்பத் தின் வடமூலையிலும், தென்மூலையிலுமாய் தண்ணீர்விழுந்துகொண்டிருந்ததுநீர்வீழ்ச்சிபோல/நட்டுவைத்தஒற்றைஇரும்புக் குழாய்தன்முனையில்பலகுழாய்களாய்பிரிவுகாட்டிஅதன்வேலையைச்செய்து கொண்டிருந்தது செவ்வனேவாய்/ துளித்துளிமென் மழைத்துளி. ஆகா பட்டுப் போன்றமனம்பாடியவருக்கும்எழுதியவருக்கும்,இசைஅமைத்தவருக்குமாய்/

படிக்கட்டுகளுக்குமுன்பாய்பெரிய அளவில்வேலிபோலசில்வர்க்கம்பிகளால் தடுப்பு அமைத்திருந்தார்கள். நன்றாகவே இருந்தது அதுவும் பார்ப்பதற்கு/

வலமும்,இடமுமாய் கடைகள் காட்டி வீற்றிருந்த பஜாரில் தேங்காய் வாங்கு வதற்காய் மார்க்கெட்டை ஒட்டிய கடைக்குச் செல்லலாம் என நினைத்த விநாடி கடக்கும் முன்னாய் எப்படியும் நான்கு இரு சக்கர வாகனங்களாவது கடந்திருக்கும்இவனை. இவனும் முயன்று பார்த்துமுடியாமல் போய் எதிர் முனையிலேயே சைக்கிளை நிறுத்தி விட்டு கையி லேயே இரண்டு தேங்காய் வாங்கி வருகிறான்.

சொல்லித்தான்கேட்கிறான்.இப்பொழுதுதேங்காய்கள்உடைத்ததும் உள்ளே கொஞ்சம்அழுகலாகஇருக்கிறது.நல்லகாய்களாகக் கொடுங்கள்என/அவரும் தட்டிப் பார்த்துதான்தருகிறார். அப்போதுதான் கவனிக்கிறான்.வலது கையில் பிரேஸ்லெட்டும், இடதுகைவிரல் களில் மோதிரமும்,கழுத்தில்மைனர்ச் செயி னுமாய் தெரிந்தார்.

சரக்குமுறுக்கா,விற்பவர்முறுக்கா,எனவரும்போதுவிற்பவரேஎனஆகிப்போகும் போல/தேங்காய்க்கடைவரிசையிலேயே நான்கு கடை தள்ளி காய்கறிக்கடை தெரிந்தது.

கமிஷன்கடைபோலும். தக்காளியும் மிளகாயும் மல்லியும்மட்டுமே இருந்தது, தக்காளிஒன்னறைக்கிலோ20ரூபாய் என்றார்கள்,கடைசி வியாபாரம் போலும். கூடவே100கிராம்மல்லிஇலைவாங்கிக் கொண்டான்.

வெங்காயம் வாங்கிய பை இடம் கொள்ளாது இனி என கடைக்காரரே ஒரு பிளாஸ்டிக் பைதேடி போட்டுக்கொடுக்கிறார்.

ஒருடீசாப்பிட்டால்தேவலாம்போல்எனத்தோணுகிறது,வீட்டைவிட்டு மாலை ஆறரைமணிக்குக்கிளம்பியது. மணி இப்பொழுது எட்டாகப் போகிறது. லேசாய் பசிப்பதுபோல் உள்ளது தற்போதைக்கு டீ சாப்பிட்டு சமன்பண்ணிவிடலாம்.

பாய்கடைக்குபோனால்கூடவேவாழைப்பழமும்சேர்த்துக்கொள்ளலாம்.வாழை
ப்பழம் சாப்பிட்டு விட்டு டீ சாப்பிடலாம்.

அதென்ன காம்பினேஷன், வாழைப்பழம்,டீ என்பார் நண்பர் ஒருவர். காம்பி னேஷனைக்ரெட்டாகச்சொல்லதெரியவில்லைஇவனுக்கு.சிரித்துக்கொள்வான்.

இப்படியானசிரிப்பிலும்,லேசானதனத்திலுமேஅடங்கிப்போகிறதானமென்மனது
டனாய்பாய்கடைக்குவருகிறான்,டீக்குசொல்லிவிட்டுபழம்சாப்பிட்டுக்கொண்டி ருக்கையில்டீமாஸ்டருடன்ஒருபெண்மல்லாடிக்கொண்டிருக்கிறாள்.”என்னிடம் இரண்டு ரூபாய்தான்இருக்கிறது, எனது கையில் இருக்கிற ரூபாய்க்கு ஒரு டீ தந்துஉதவுங்கள்தயவுசெய்துஎன,முடியாதுஎன திட்ட வட்டமாய் மறுத்த மாஸ் டர் அந்தப் பெண்ணை அவ்விடம் விட்டு நகர்ந்து போகுமாறும், வியாபாரத்தை கெடுக்காதே எனவுமாய் போட்ட சப்தம் இவன் தந்த பணத்தில் அமுங்கிப் போக அவளுக்குமாய் தருகிறார் மாஸ்டர்.கும்பிடுபோட்டகைக்குள்ளாய் டீக்
கிளாஸைவாங்கியவள்கக்கத்தில்இடுக்கியிருந்தகுழந்தைக்குடீயைஅருந்தத் தருகிறாள்.

பாயிடம்மிச்சம்சில்லறையைஅந்தப்பெண்ணுக்கேகொடுத்துவிடுமாறுசொல்லி நகன்றஇவன்கொண்டு வருகிற பொருள் கீழே விழுந்து விடக் கூடாது  என்கிற கவனத்திலும்,ஜாக்கிரதையிலுமாய்வந்துகொண்டிருக்கிறா ன்.

5 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
எப்போதும் கவனம் தேவை...அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

நேரில் கண்டது போல...

கவனிக்க : பதிவு அப்படியே side-லும் வருகிறது...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
தம +1
வலது ஓரத்திலும் பதிவு தெரிகிறது
கவனிக்கவும் நண்பரே

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்டுரைக்குமாக/