29 May 2014

பிரிமனை,,,,,,


அசைவற்றிருந்தகையிலிருந்தரோமங்கள்சிலிர்த்தும்மடங்கியுமாய் காட்சிப்படுகின்றன.
விறைத்து உருண்டு தெரிந்த கையின் தசைகள் முறுக்கி தளர்வற்று மிக,மிக இறுக்கமாகவும் புடைத்துத்தெரிந்ததாகவும்.
காலிலும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்க வேண்டும்.மூடியிருந்த கைலி அதைகாண்பிக்க மறுக்கிறது.கோணி இருந்த வாய் காண்பித்த முகம் மூன்று ,நான்கு நாட்களின் ரோமத்துடன் வெள்ளையாயும், கருப்பாயும்/
ஊதாக்கலரில் வெள்ளைக்கட்டங்கள் போடப்பட்டிருந்த கைலி கட்டி யிருந்தஅவர்ரோமம்நிறைந்தமார்புடனும்,இளந்தொந்திசரிந்துதெரிய  வுமாய் அமர்ந்திருந்தார்.
அவர் அமர்ந்திருந்த ஊதாக்கலர் ப்ளாஸ்டிக் சேரைப்போலவே ஆஸ் பத்திரியின் சுவரும்,தரையும் வெளிர் கலர்காட்டி கண்களை இடறச் செய்யாமல் இருந்தது.
அருகாமையிலேயே மரச்சேர் ஒன்றும் கிடந்தது.27 ஆம் எண் அறை யை கேட்டு விசாரித்துச்சென்ற6மணிமாலைப் பொழுதில் அவர் வார் ட்டின்வெளியேஅமர்ந்திருக்கிறார்.
அவர் நாரயணசாமி.ஆயிரத்து தொள்ளாயிரத்து சொச்சங்களில் பிறந் து 2012 ல் வாழ்ந்து கொண்டிருப்பதை சொல்லிச்செல்கிறது அவரது வரலாறு.
ஐந்தரைஅடி உயரத்தில் மாநிற மேனிக்கு சொந்தக்காரான அவரின் பிறப்பு,வளர்ப்பு,படிப்பு,சொந்த ஊர்,,,,,எதுவும் தெரியாது எனக்கு.
நானும்அவரும்5வருடங்கள்ஒன்றாக பணிபுரிந்தோம் என்கிற அடை யாளத்தைத்தவிர வேறெதுவும் இல்லை எங்களுக்குள்.
நல்லமனிதர்,நல்லவேலைக்காரர்என்பதைதவிர்த்துதோற்றத்திலும், பேச்சிலுமாய் எப்போதும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவார். நான் கூட ஆச்சரியப்பட்டதுண்டு அவரைப்பார்த்து/
“எப்படி இப்படியெல்லாம் இருக்க முடிகிறது” அவரால் இப்படிஎன. நான் மட்டும் இல்லை.எங்களது அலுவலகத்தில் பலபேர் எனது காது படவும்,அவரிடம் கேட்கவும் செய்திருக்கிறார்கள்.காலையில் ஒரு உடை,மதியம் சாப்பிட்டு வருகையில் வேறொரு உடை என மாறி, மாறி காட்சி தருகிற அவர் திடீரென மீசையை மழித்துக் கொண்டு வருவார்.அதுவும் பார்ப்பதற்கு நன்றாகவே இருக்கும்.
கண்ணை உறுத்தாத கலரில் உடை, யார் மனதையும் புண்படுத்தாத பழக்கம்,உண்மையைப் பேசி விடுகிற சில பல வேலைகளில் நாக்கை கடித்துக்கொள்கிற பாங்கு,(சம்பந்தப்பட்டவர்களின் மனம் உண்மையால் சுட்டுவிடும் என்பார்.)
படபடக்கிறஇறக்கைபோலானஅவரதுபேச்சுஎனஅப்படித்தான்காட்சிப் பட்டுத்தெரிந்தார்அந்தஅலுவகத்தில்/
எப்படி ஒரு மனிதர் எல்லோருக்கும் பிடித்தமானவராயும், எல்லோரு க்கும்பிடித்தமற்றவராயும் ஆகமுடியாதோஅதுமாதிரிதான் அவரும்  இருந்தார்,தெரிந்தார்.
இது தவிர அவருக்கு பணிக்கப்பட்டிருக்கிற வேலை,அவர் பணி செய் யும் விதம் சடுதியில் வேலை முடிக்கிற விரைவு,அடுத்தவர்களின் வேலையை தனது வேலையாய் கருதி முடித்தும்,முடிச்சவிழ்த்தும் கொடுக்கிற பாங்கு என நிறைந்து போன இதர இதரவைகளுடனு மாய் நிறைந்து காட்சிப்பட்டுத்தெரிந்த அவரது பாதச்சுவடுகளின் அல்லது அடையாளத்தின் நீட்சி அவர் பதவி உயர்வு பெற்ற நாட்க ளின் நகர்வுகளில் அங்கு,இங்கு என தொலைதூர ஊர்களுக்கு சென்று பணிபுரிந்து திரும்பி தனது சொந்த ஊருக்கே அருகாமையிலேயே கூப்பிடு தொலைவுக்கும் சற்று அதிகமான தூரத்திலுள்ள ஊரில் பதிவாகிறது.அப்படி பதிவாகி பணிபுரிந்து கொண்டிருந்த நாளின் ஓய்வான இரவுப் பொழுதில் தூக்கத்திலிருந்த அவருக்கு ஒரு பக்கம் செயல்பாடு அற்றுப்போகிறது.
உடலின் வலதுபக்கம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்க ஆஸ்பத் தி ரியில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.
மடியில்வைத்திருந்தகையைமெதுவாக,மிகமிகமெதுவாகதூக்குகிறார்,
பின்இறக்குகிறார்.
கைவிரல்கள் ஐந்தையும் நீட்டி,நீட்டி மடக்குகிறார்.ஒவ்வொரு விர லையும் மடக்கி,மடக்கி பெரு விரல் தொடுகிறார்.அது போலவே காலையும் நீட்டி,நீட்டி மடக்குகிறார்.தரையில் இழுபடுகிற பாதத்தின் உரசலோடு தூக்கிய காலை மடக்கவும்,மடக்கிய காலை தூக்கவு மாய் இருந்த அவரது இயக்கத்திற்கு உடல் முழுவதுமாக ஒத்துழை க்க மறுக்கிறது.
அமர்ந்திருந்த பிளாஸ்டிக் சேரின் கைபிடியை இறுகப்பற்றியவாறு வலது காலையும்,வலது கையையும் தூக்கி,தூக்கி இப்படி செய்கி றார்.
பிஸியோதெரபிக்காரர் செய்யச்சொன்ன பயிற்சி என்கிறார்.அவர் இருந்த அறையை நோக்கி கைகூப்பியவாறு சென்ற நான் “எப்படியி ருக்கிறது உடல் இப்பொழுது” என கேட்க வாய் எழாதவனாய் அவரது கைபிடித்து நிற்கிறேன் மௌனமாக/
கஷ்டப்பட்டு உடல் அசைத்து வாங்க என தனது அருகில் உள்ள சேரைகாட்டிஅமருமாறுபணிக்கிறார்.கரண்ட்இல்லாததால் காற்றோ ட்டத்துக்காய்வெளியேவந்துஅமர்ந்திருப்பதாகவும்உடனிருந்ததனது  தந்தைகீழேபோயிருப்பதாகவும்திணறித்திணறிசொன்ன அவர் கைக் கும், காலுக்குமானபயிற்சியை செய்டு கொண்டேயிருக்கிறார்.
சரியாக இயங்க மறுக்கிற கையையும், காலையும்,தூக்கவும், மடக்க வுமாய் இருக்கிறார்.
எனது பார்வையும்,அவரதுபார்வையுமாய் நேருக்கு நேராகவும், தரை தொட்டும் சந்தித்துக்கொண்டமௌனநிமிடங்கள் மனங்கள்பேசியது நிறையவேஎன கனமாகவும்,லேசாகவும் பதிவாகிறது ஆஸ்பத்திரி யின் வெற்று வெளியில்/
மனம் கனத்தும் சங்கடமாயும் அங்கு அமர்ந்திருந்த நிமிடங்களை, அந்த அரை மணி பொழுதைபின் தள்ளிவிட்டு அவரிடம்கை கூப்பி விடைபெற்ற போதுசொல்கிறார்.
புள்ளைங்கள நல்லாபாத்துக்கங்க, நல்லாபடிக்க வைங்க, அவுங்க நலன் ரொம்ப முக்கியம் என்கிறார் திக்கித்திணறியவராக/
கண்களில் நீர் சுற்ற அவரது பேச்சுக்கு தலையசைத்தவனாய் கிளம்பி வருகிறேன்அங்கிருந்து/

8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நல்லவர்களுக்குத்தான் இப்படியெல்லாம் வருகிறது
கவனித்துப் பார்த்தீர்களேயானால், குடித்து விட்டும் , சதா புகைத்துக் கொண்டும் வாழும் மனிதர்களுக்கு ஒரு வியாதியுமே வருவதில்லை
நல்லவர்களுக்குத்தான் அத்தனையும் வருகிறது
தம 2

Unknown said...

பிரிமனை என்பது எந்த விதத்தில் பொருந்தும் என்று விளக்கினால் நல்லது !
த ம 3

Pandiaraj Jebarathinam said...

அவரது குணநலன்களை சுட்டிக்காட்டிய விதம் அழகு..

நிலவுக்கு தேய்பிறை போல்
மனிதனுக்கும் வாழ்வில் சில தடுமாற்றங்கள் வரத்தான் செய்யும் போல..

அ.பாண்டியன் said...

வணக்கம் ஐயா
நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவு ஐயா. ஐயா அவர்கள் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவார். அவருக்கான எனது இறை வேண்டல் தொடரும்.

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் பகவான் ஜி சார்.நன்றி
வருகைக்கும்,கருத்துரைக்குமாக.
பிரிமனை என்பது அக்காலத்தில்
தண்ணீர்குடத்தின் கீழ் வைக்கபயன் படுகிற
கயிற்றால் செய்த வட்டவடிவ டை/

vimalanperali said...

வணக்கம் ஜெ பாண்டியன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் அ பாண்டியன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/